சற்றுநேரத்தில் பட்ஜெட்! கோயிலில் அமைச்சர்கள் வழிபாடு!
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலுக்கு மத்தியில் கோயிலில் அமைச்சர்கள் தரிசனம் செய்தது பற்றி...
தமிழ்நாடு பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் அமைச்சர்கள் வழிபாடு செய்தனர்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சியமைந்துள்ள நிலையில், 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் அமைச்சர்கள் என். ஆனந்த், விஜய் பாலாஜி ஆகியோர் இன்று காலை சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதனிடையே, சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்துக்கு வந்தடைந்தார்.
மேலும், நேற்று காலை கைது செய்யப்பட்டு இரவு விடுவிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்துள்ளார்.
Budget shortly! Ministers offer prayers at the temple!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.