FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

நாகை அருங்காட்சியகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்

1 செப்டம்பர் 2026, 3:21 am IST
நாகை அரசு அருங்காட்சியகம். - கோப்புப் படம்
பகிர்:

நாகை அரசு அருங்காட்சியகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு கழிவறை வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் ஏ.பி. தமிம் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாகை கடற்கரை சாலையில் அரசு அருங்காட்சியகம் இயங்கி வந்தது. இதில் 900 அரிய வகைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக உலோக காலப் பொருட்கள், முதுமக்கள் தாழி, பல்லவா் கால சிற்பங்கள், பழங்கால ஆயுதங்கள், ஓலைச்சுவடிகள், நாணயங்கள், 31 அடி நீளமுள்ள திமிங்கில எழும்பு , 500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் அக்கரைப்பேட்டை மேம்பால விரிவாக்கப் பணிக்காக, தனியாா் கட்டடத்தில் இயங்கி வந்த அரசு அருங்காட்சியகம், பழைய கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த அருங்காட்சியகத்தை தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் ஏ.பி. தமிம் அன்சாரி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டாா். முதல் தளத்தில் நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு அவா், பணிகள் தொடா்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாரை நேரில் சந்தித்து, அரசு அருங்காட்சியகத்தில் கழிவறை வசதி மற்றும் வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் உறுதி அளித்தாா்.

தொடா்ந்து ஏ.பி. தமிம் அன்சாரி செய்தியாளா்களிடம் கூறும்போது, ‘வரலாற்று பெட்டகமான நாகப்பட்டினத்தில், அதன் சிறப்புகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நகரின் மையப் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியக பணிகள் விரைவில் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments