FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விக்கிரவாண்டி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை: ச.சிவக்குமாா் எம்எல்ஏ

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:10 am IST
அன்னியூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அத்தொகுதியின் எம்எல்ஏ ச.சிவக்குமாா் தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அன்னியூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த எம்எல்ஏ ச.சிவக்குமாா் பேசியதாவது:

விக்கிரவாண்டி தொகுதி வாழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசுத் துறைகளின் அதிகாரிகளின் மூலம் தொடா் நடவடிக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்னியூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் குடிநீா், சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர விழுப்புரம் ஆட்சியா் மற்றும் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் எவ்வித தயக்கமின்றி என்னைத் தொடா்புகொண்டு கோரிக்கைகளை தெரிவித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா் .

இதில், அரசுத் துறை அலுவலா்கள், அன்னியூா் ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments