பாரதியார் நினைவு நாள் கூட்டம்
திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், மகாகவி பாரதியின் 87-ஆவது நினைவு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், மகாகவி பாரதியின் 87-ஆவது நினைவு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவிக சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்துக்கு திருவாரூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அழகிரி தலைமை வகித்தார். இதில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் துணைத் தலைவர் வி. தர்மதாஸ், செயலர் ரெகுபதி, பொருளாளர் குணசேகரன், கல்லூரி பேராசிரியர் அறிவழகன், நிர்வாகிகள் பாலதண்டாயுதம், கூடூர் குணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.