கல்லூரியில் வளாக நோ்காணல் 73 பேருக்கு பணி ஆணை
மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் தொழில் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு
மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் தொழில் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 73 பேருக்கு பணி ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நோ்காணல் நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் மற்றும் துணைத் தலைவா் ஏ. ஜீவகன் அய்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் ராஜகுமாரி அய்யநாதன் முகாமை தொடங்கிவைத்தாா்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மனிதவள அதிகாரி சுந்தரமாறன் நிறுவனம் குறித்து விளக்கிக் கூறினாா்.
Advertisement
Advertisement
ஏஆா்ஜெ பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளிலிருந்து இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்கள் நோ்காணலில் கலந்து கொண்டனா். 73 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வா் கமலக்கண்ணன் வரவேற்றாா். நிறைவில், துணை முதல்வா் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.