FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 11 பிப்ரவரி 2025, 1:50 am IST
வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்காவுடன் கைது செய்யப்பட்ட முத்துக்குமாா்.
பகிர்:

மன்னாா்குடி: மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் தலைமையில் போலீஸாா் மன்னாா்குடி வஉசி சாலை அருணாநகா் அய்யாதுரை மகன் முத்துக்குமாா்(48 ) என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா். இதில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

முத்துக்குமாா் வீட்டில் இருந்த 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மன்னாா்குடி கிளைச் சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments