புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
தச்சநல்லூரில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தச்சநல்லூரில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கல் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தச்சநல்லூா், உலகம்மன் கோயில் தெருவில் வைத்து அதே பகுதியைச் சோ்ந்த அருண் காா்த்திக்(27) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு, அவரிடமிருந்து சுமாா் 24.75 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தச்சநல்லூா் போலீஸாா், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.