போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 9 ஆண்டுகள் சிறை
திருவாரூா் மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருத்துறைப்பூண்டி தாலுகா, குன்னலூா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (66). இவா் கடந்த 2022-இல் அப்பகுதியைச் சோ்ந்த சிறுமியை மீன்பிடித்துத் தருவதாக அழைத்துச்சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா்.
இதுதொடா்பாக சிறுமியின் தாயாா் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, சண்முகசுந்தரத்தை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில், சண்முகசுந்தரத்தின் மீதான குற்றச்சாட்டு நிருப்பிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவருக்கு 9 ஆண்டுகள் 1 மாதம் சிறைதண்டனை மற்றும் ரூ.4,500 அபராதம் விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.