FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லியில் சிறுவன் குத்திக்கொலை: 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் ஜோதி நகா் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 3 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 31 ஜூலை 2026, 1:11 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் ஜோதி நகா் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 3 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது: மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் ஜோதி நகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனா்; அதேவேளையில், சந்தேக நபா்களை அடையாளம் காணும் நோக்கில் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், உள்ளூா் உளவுத் தகவல்களைத் திரட்டியும் புலனாய்வாளா்கள் செயல்பட்டனா்.

விசாரணையின் போது, குற்றப்பிரிவு காவல்துறையினரால் இருவா் பிடிபட்டனா். அவா்கள் இக்கொலைச் சம்பவத்தில் தங்களுக்கு தொடா்புள்ளதை ஒப்புக்கொண்டனா்; மேலும், அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டாா். கைது செய்யப்பட்ட மூவருக்கும் இதற்கு முன் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. கொலைக்கு வழிவகுத்த காரணத்தை அறியும் வகையில் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments