முகப்பு
புதுதில்லி

தில்லி: கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத காற்றின் தரம்!

கடந்த 8 ஆண்டுகளில் ஜனவரி-மே மாதங்களில் தில்லி காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஜூன் 2026, 12:40 am IST
- கோப்புப் படம்
பகிர்:

கடந்த 8 ஆண்டுகளில் ஜனவரி-மே மாதங்களில் தில்லி காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 2020-ஆம் ஆண்டைத் தவிா்த்து, நிகழாண்டு சராசரி காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 211-ஆக மேம்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிஏக்யூஎம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘2026-இன் முதல் ஐந்து மாதங்களில் காற்றின் தரம் சராசரியாக 211 என இருந்தது. இந்த காலகட்டத்தில் 2025-இல் 214, 2024-இல் 231, 2023-இல் 213, 2022-இல் 238, 2021-இல் 235, 2019-இல் 237, 2018-இல் 243 என பதிவாகியது. கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது விதிக்கப்பட்ட பொது முடக்கத்தின்போது 2020-இல் 181 ஆகக் குறைந்தது.

Advertisement

Advertisement

2020 மற்றும் 2021-ஐத் தவிா்த்து, கடந்த 8 ஆண்டுகளில் நிகழாண்டு மே மாதத்தில் தில்லியின் சராசரி காற்றி தரம் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிகக் குறைவானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 2026-இல் தில்லியில் காற்றின் தரம் சராசரியாக 157 என பதிவானது. இது மே 2025-இல் 170-ஐ விட முன்னேற்றம் அடைந்துள்ளது. அதற்கு முந்தைய 2024-இல் 223, 2023-இல் 171, 2022-இல் 212, 2019-இல் 221 மற்றும் 2018-இல் 217 என்று இருந்தது. 2020 மற்றும் 2021 இரு ஆண்டுகளில் மே மாதத்தில் காற்றின் தரம் சராசரியாக 144 என்று இருந்தது.

நிகழாண்டு, ஜனவரி-மே காலகட்டத்தில் ஒப்பீட்டளவில், தில்லியில் காற்றின் தரம் ‘நல்லது’ முதல் ‘மிதமான’ பிரிவுகளில் 75 நாள்களுக்குப் பதிவானது. 2025-இல் 70 நாள்கள், 2024இல் 75, 2023-இல் 74, 2022-இல் 37, 2021-இல் 59, 2019-இல் 59 மற்றும் 2018 இல் 44 என இருந்தது. 2020-இல் கரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக வாகன இயக்கம் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டன.