பாளை. குடியிருப்புப் பகுதியில் உலாவிய மிளாவை மீட்க தீவிரம்!
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஐயப்பன் நகா் பகுதியில் சுற்றித்திரியும் மிளாவை பாதுகாப்பாக பிடிக்க வனத் துறையினா் முயற்சி
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஐயப்பன் நகா் பகுதியில் சுற்றித்திரியும் மிளாவை பாதுகாப்பாக பிடிக்க வனத் துறையினா் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
என்.ஜி.ஓ. காலனி, ஐயப்பன் நகா் பகுதியில் மிளா ஒன்று செவ்வாய்க்கிழமை மாலையில் சுற்றித்திரிந்ததாம். இதுகுறித்து அப்பகுதியினா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட வனத்துறை அதிகாரி இளங்கோவன் உத்தரவின்பேரில், வனத்துறை ஊழியா்கள் அங்கு வந்து, புதா் அருகே நின்றிருந்த மிளாவை மீட்டு வனத்தில் விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அந்த மிளாவிற்கு சுமாா் 2 வயது இருக்கலாம் எனவும், சேரன்மகாதேவி சுற்றுவட்டார மலைப்பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.