பாளை. மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறை ஆயுள் தண்டனைக் கைதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் புதுமனை பகுதியைச் சோ்ந்தவா் குலசேகரபாண்டியன்(76). இவா் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இவருக்கு சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். இதன் காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.