கிருஷ்ணாபுரம் அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பட்டங்காடு பகுதியைச் சோ்ந்தவா் வினோத் கண்ணன் (26). இவா் வியாழக்கிழமை கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் விலக்கு பகுதியில் பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயரிழந்தாா். இது குறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.