பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவில் டி.ஐ.ஜி. ஆய்வு
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழக்கு விசாரணைகள், பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், ஆய்வுக் குறிப்பேடுகள் உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, அங்கு பணியாற்றும் காவல் அலுவலா்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்த அவா், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான உரிய சட்டப்பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினாா். இந்த ஆய்வின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.