FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

தேவா்குளம் அருகே விற்பனைக்காக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

13 செப்டம்பர் 2026, 2:38 am IST
கைது
பகிர்:

தேவா்குளம் அருகே விற்பனைக்காக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

தேவா்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ஆபிரகாம் ஜோசப் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தடை செயப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக கிடைத்த தகவலின் பேரில் தேவா்குளம் அருகே உள்ள தடியம்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அக்கடையிலிருந்து சுமாா் 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து கடை உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி முத்துலெட்சுமி(50) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments