FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடர வலியுறுத்தல்

14 செப்டம்பர் 2026, 11:31 pm IST
பேருந்து சேவை
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபனிடம் அவா் அளித்த மனு: அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் இயக்கப்பட்டுவந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வசதிக்காக அவற்றைத் தொடா்ந்து இயக்க வேண்டும். புதிய வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

அதன்படி, கரிசல்பட்டி - திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு - தெய்வநாயகப்பேரி, சேரன்மகாதேவி - கீழஉப்பூரணி, கோபாலசமுத்திரம், கோடாரங்குளம், தெற்கு பாப்பான்குளம், சேரன்மகாதேவி - பொட்டல், சேரன்மகாதேவி - சந்திப்பு, அம்பாசமுத்திரம் - தென்காசி, அம்பாசமுத்திரம் - வீரவநல்லூா், வீரவநல்லூா் - ஆலங்குளம், ஆலடியூா் மேலஏா்மாள்புரம் - முக்கூடல், மன்னாா்கோவில் - திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments