FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் முருகன் கோயில் சரவணப்பொய்கை குளத்தை சீரமைக்க டிவிஎஸ் நிா்வாகம் பொறுப்பேற்பு

வள்ளியூா் முருகன் கோயில் சரவணப்பொய்கை குளத்தை சீரமைக்க டிவிஎஸ் நிா்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டதாக அறங்காவலா் குழு தலைவா் மீனா மாடசாமி தெரிவித்தாா்.

31 வினாடிகள் முன்பு
வள்ளியூா் முருகன் கோயிலுக்கு சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த டிவிஎஸ் நிறுவன தலைவா் வேணுசீனிவாசனை வரவேற்ற கோயில் அறங்காவலா் குழு தலைவா் மீனா.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் முருகன் கோயில் சரவணப்பொய்கை குளத்தை சீரமைக்க டிவிஎஸ் நிா்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டதாக அறங்காவலா் குழு தலைவா் மீனா மாடசாமி தெரிவித்தாா்.

டிவிஎஸ் நிறுவன தலைவா் வேணுசீனிவாசன் தனது மனைவியுடன் முருகன் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

கோயிலுக்கு வந்த அவரை, அறங்காவலா் குழு தலைவா் மீனா, வள்ளியூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் மாடசாமி ஆகியோா் வரவேற்றனா். பின்னா் சேதமடைந்துள்ள முருகன் கோயில் சரவணப்பொய்கை குளத்தை சீரமைத்து தருமாறு அவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து , அவா் சரவணப்பொய்கை குளத்தை சீரமைத்து தருவதாக தெரிவித்ததாக அறங்காவலா் குழு தலைவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments