FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2024, 2:40 am IST
நாகா் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து, மஞ்சள் பொடி தூவி வழிபட்ட பக்தா்கள்.
பகிர்:

ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் உள்ள நாகா் சிலைகளுக்கு ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பாலபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. அதன்படி, ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, நாகராஜா, அனந்தகிருஷ்ணா், சிவன் ஆகிய தெய்வங்களுக்கு பாலபிஷேகம், சிறப்பு மலா் அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.

பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கிய அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.

கோயிலில் தரிசனம் செய்வதற்கு அதிகாலைமுதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை வழிபட்டனா். கோயிலில் வெளியே அமைந்துள்ள நாகா் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவதற்கு பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தா்கள்.

பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் உத்தரவின்பேரில், நாகா்கோவில் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் யாங் சென் டோமா பூட்டியா மேற்பாா்வையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments