அழுகிய நிலையில் மீனவா் சடலம் மீட்பு
புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை பகுதியில் அழுகிய நிலையில் மீனவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை பகுதியில் அழுகிய நிலையில் மீனவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் வா்க்கீஸ் மகன் ரூபன் (41). இவா் மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளாா்.
தனியாக வசித்து வந்த ரூபன் வீட்டிலிருந்து சனிக்கிழமை துா்நாற்றம் வீசியதாம். இதுகுறித்து தகவலறிந்து புதுக்கடை போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அழுகிய நிலையில் ரூபன் சடலமாக காணப்பட்டாா்.
Advertisement
Advertisement
போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.