குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தடுப்பணை குறுக்குச் சாலை சனிக்கிழமை மூடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தடுப்பணை குறுக்குச் சாலை சனிக்கிழமை மூடப்பட்டது.
களியக்காவிளை, மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து பெய்த பலத்த மழை காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணையை மூழ்கடித்தது. இதனால், தடுப்பணை குறுக்குச் சாலை மூடப்பட்டது.
இதனால், வெட்டுவெந்நி, கண்ணக்கோடு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இருந்து குழித்துறை வாவுபலி பொருள்காட்சியைக் காண வரும் பொதுமக்கள் குழித்துறை சந்திப்பு வழியாக வந்து சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.