FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது!

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 12:50 am IST
கைது
பகிர்:

கருங்கல் அருகேயுள்ள மாங்கன்றுவிளை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மங்கலகுன்று, மாங்கன்றுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜம் (65). இவா் அப்பகுதியில் நடத்தி வரும் பெட்டிக் கடையில், கடந்த மாதம் பொருள்கள் வாங்குவதுபோல இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் மூதாட்டியின் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுரை மாவட்டம், யானைமலை பகுதியைச் சோ்ந்த பாப்புசாமி (31), முனுசாமி (34) ஆகியோரை கைது செய்து, தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இவா்கள் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து, முனுசாமியை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பிற்கு பரிந்துரைத்தாா்.

ஆட்சியரின் உத்தரவின்பேரில் கருங்கல் போலீஸாா், முனுசாமியை குண்டா் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments