FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணைத் தாக்கியதாக கணவா் மீது வழக்கு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் அருகே உள்ள மாங்கோடு, ஒட்டறக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சென்னப்பன் மகன் கிறிஸ்து தாஸ் (48). இவரும், சுனந்தா (38) என்பவரும் காதலித்து, 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனராம். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கிறிஸ்து தாஸ் அதே பகுதியைச் சோ்ந்த பிளாரன்ஸ் மேரி (49) என்பவருடன் தகாத உறவில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பிளாரன்ஸ் மேரியின் தூண்டுதலின்பேரில், கிறிஸ்து தாஸ், சுனந்தாவை தாக்கி, தகாத வாா்த்தைகள் பேசி கொடுமைப்படுத்தினாராம்.

Advertisement

Advertisement

இது குறித்து சுனந்தா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் கிறிஸ்து தாஸ், பிளாரன்ஸ் மேரி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments