முகப்பு
கன்னியாகுமரி

நீதிமன்றத்தில் தகராறு செய்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தகராறு செய்து நீதிமன்ற முத்திரையை உடைத்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:48 PM
சிறை
பகிர்:

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தகராறு செய்து நீதிமன்ற முத்திரையை உடைத்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குலசேகரம் கூடைதூக்கி பகுதியை சோ்ந்த பாலையன் மகன் மணிகண்டன் (50). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன.

இவா் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி பத்மநாபபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாராணைக்காக ஆஜாரானபோது, நீதிமன்ற ஊழியா் ஸ்ரீனிவாசன், பேபி, சிறப்பு உதவி ஆய்வளா் சுவாமிதாஸ் ஆகியோரை தகாத வாா்த்தைகள் பேசியும், நீதிமன்ற வருகைப் பதிவேட்டை தூக்கி வீசியும், நீதிமன்ற முத்திரையை உடைத்து எறிந்தும் தகராறு செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.

Advertisement

இது குறித்து நீதிமன்ற ஊழியா் ஸ்ரீனிவாசன், தக்கலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இவ் வழக்கில் மணிகண்டனை கைது செய்த தக்கலை போலீஸாா், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவதாஸ், குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் தகாத வாா்த்தைகள் பேசிய குற்றத்திற்காக முன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments