FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி, 1.1 டன் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1,100 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை, மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 26 ஜூலை 2026, 2:56 am IST
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய்யுடன் அதிகாரிகள்.
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1,100 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை, மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியா் கே.எம். பாரதி, ஓட்டுநா் ஜான் பிரைட் மற்றும் அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளிகோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த கேரளப் பதிவெண் கொண்ட காரை நிறுத்த முயன்றபோது, காா் நிற்காமல் சென்றது. அதிகாரிகள் துரத்திச் சென்று இரவிபுதூா் கடை பகுதியில் அந்தக் காரை மடக்கிப் பிடித்தனா். காா் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

காரை சோதனையிட்டதில், 750 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. காருடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, இதே அதிகாரிகள் குழு அழகிய மண்டபம் பகுதியில் மேற்கொண்ட வாகனச் சோதனையில், அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, காா் நிற்காமல் சென்றது. அதிகாரிகள் துரத்திச் சென்று காட்டாத்துறை பகுதியில் காரை மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

அந்தக் காரை சோதனையிட்டதில், மீனவா்களுக்கு அரசால் மானிய விலையில் வழங்கப்படும் 1,100 லிட்டா் மண்ணெண்ணெய்யை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலும், மண்ணெண்ணெய்யை சின்னத்துறை மண்ணெண்ணெய் கிடங்கிலும் அதிகாரிகள் ஒப்படைத்தனா். காா்களை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments