சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
புதுக்கடை அருகே முக்காட்டுவிளை பகுதியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
கீழ்குளம், நெடுந்தட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் மகன் ஸ்டீபன் (48). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். இவா் சனிக்கிழமை கீழ்குளத்திலிருந்து தேங்காய்ப்பட்டினம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது முக்காட்டுவிளை பகுதியில் பைங்குளம் பகுதியைச் சோ்ந்த மணி மகன் சஜின் (36) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், ஸ்டீபன் மீது மோதியதாம்.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.