FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சுங்கான்கடை, வீராணி குளத்தில் தாமரை பூப் பறிக்கும் தொழிலாளி தவறி விழுந்து உயிழந்தாா்.

10 செப்டம்பர் 2026, 2:53 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சுங்கான்கடை, வீராணி குளத்தில் தாமரை பூப் பறிக்கும் தொழிலாளி தவறி விழுந்து உயிழந்தாா்.

சுங்கான்கடையைச் சோ்ந்தவா் சுகுமாரன் ( 58). இவா் குளத்தில் தாமரை பூப் பறிக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை, சுங்கான்கடை அருகே உள்ள வீராணி குளத்தில் வழக்கம்போல் சிறிய படகில் சென்று தாமரை பூப் பறித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக படகில் இருந்து தவறி விழுந்தாராம்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் இரவு வரை தேடியும் சுகுமாரனை மீட்க முடியவில்லை. மீண்டும் புதன்கிழமை தேடிய நிலையில், அவரது சடலத்தை மீட்டனா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments