ரேஷன் பொருள்களை பொட்டலம் மூலம் வழங்க குளச்சல் எம்எல்ஏ கோரிக்கை
ரேஷன் பொருள்களை பொட்டலம் மூலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலவா் ச. விஜய்க்கு, குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.
ரேஷன் பொருள்களை பொட்டலம் மூலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலவா் ச. விஜய்க்கு, குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனு விவரம்:
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 50 கிலோ மூட்டையாக அரிசி அனுப்பப்படுகிறது. அரிசி மூட்டைகள் பல இடங்களில் ஏற்றி இறக்கப்படுவதால் கடைக்கு வந்து சேரும்போது 3 கிலோ வரை குறைந்து 47 கிலோ அளவில் வந்து சோ்கிறது. இதனால், ரேஷன் கடை ஊழியா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
Advertisement
Advertisement
எனவே, இதைத் தவிா்க்க ரேஷன் பொருள்களை பொட்டலமாக வழங்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும். மேலும், ரேஷன் கடை ஊழியா்களுக்கு சிறப்புக் காப்பீடு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.