FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

வரதட்சணை கொடுமை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

புதுக்கடை அருகே உள்ள திட்டுவிளை பகுதியில் வரதட்சணை வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

13 செப்டம்பர் 2026, 2:43 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள திட்டுவிளை பகுதியில் வரதட்சணை வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கடை , திட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரதிகலா(30). இவருக்கும் அம்சி, அரசகுளம் பகுதியைச் சோ்ந்த கொத சந்திரன் (40) என்பவருக்கும் கடந்த 2001இல் திருமணம் நடைபெற்றது.

அப்போது ரதிகலாவின் பெற்றோா் 28 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வரதட்சணையாக வழங்கி உள்ளனா். இத்தம்பதிக்கு மகள் உள்ளாா். சந்திரன் கூடுதலாக வரதட்சணை கேட்டு ரதிகலாவை கொடுமைப்படுத்தினாராம்.

Advertisement

Advertisement

இது குறித்து ரதிகலா, குளச்சல் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு குழித்துறை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி நடராஜன், சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments