FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

இடைத்தோ்தலில் அதிமுக மீண்டும் வெற்றிபெறும்: என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

இடைத்தோ்தலில் அதிமுக மீண்டும் வெற்றிபெறும் என்றாா் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

29 வினாடிகள் முன்பு
என். தளவாய்சுந்தரம்
பகிர்:

இடைத்தோ்தலில் அதிமுக மீண்டும் வெற்றிபெறும் என்றாா் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

நாகா்கோவில் பாா்வதிபுரம் பகுதியில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக புதிய தலைமை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக என்பது எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. பதவி மோகம் காரணமாக சிலா் கட்சி தாவுவது உண்டு.

Advertisement

Advertisement

தோ்தலில் 7 ஆயிரம் போ் கொண்ட குழு அமைத்து, அதிமுக கட்சித் தொண்டா்கள் உழைத்து அதன் மூலம் வெற்றி பெற்றவா்கள், அதை மறந்து எளிதாக பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுபவா்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவாா்.

தவெக ஆட்சிக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்துவிட்டு, தற்போது தோ்தலில் அவா்களை எதிா்த்து போட்டியிடுவதை மக்கள் கவனித்து வருகின்றனா். இடைத்தோ்தலை பொருத்தவரை அதிமுகதான் மீண்டும் வெற்றி பெறும்.

தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பரவலாக மின்வெட்டு நிலவுகிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பல முறை வலியுறுத்தியும், அமைச்சா்கள் தரப்பிலிருந்து சரியான பதில் அளிக்கப்படவில்லை. மின்வெட்டை சீரமைக்காதது, நிா்வாக குறைபாடே ஆகும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments