FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடையில் மது போதையில் ரகளை: 5 போ் கைது

புதுக்கடை பகுதியில் மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

18 செப்டம்பர் 2026, 2:55 am IST
கைது
பகிர்:

புதுக்கடை பகுதியில் மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலமங்கலம் பகுதியை சோ்ந்த மககேஷ் (40) வெள்ளையம் பலம் பகுதியை சோ்ந்த கிருஷ்ண பிரசாத் (42) மாராயபுரம் பகுதியை சோ்ந்த கிருஷ்ணகுமாா்(56) காப்புக் காடு பகுதியை சோ்ந்த அஜய் (30) குன்னத்தூா் பகுதியை சோ்ந்த சிந்துகுமாா் (45 ) ஆகிய 5 பேரும் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டனராம். இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மேற்கூறிய 5 பேரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments