FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

வெள்ளாளன் புதுக்குளத்தில் குப்பைகள் எரிப்பு: மக்கள் அவதி

பாவூா்சத்திரம் அருகே கொண்டலூா் வெள்ளாளன் புதுக்குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு, இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:59 am IST
சுமை ஆட்டோவில் கொண்டுவந்து குளத்தில் கொட்டப்படும் குப்பைகள்.
பகிர்:

பாவூா்சத்திரம் அருகே கொண்டலூா் வெள்ளாளன் புதுக்குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு, இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட குக்கிராமங்களில் வீடுதோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், ஆவுடையானூா் ஊராட்சி கொண்டலூா் அருகேயுள்ள வெள்ளாளன் புதுக்குளத்தில் திப்பணம்பட்டி ஊராட்சியின் குப்பை வாகனங்கள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குப்பைகள் இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் , அப்போது எழும் புகைமூட்டத்தால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், தூக்கமின்மை உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், குப்பைகளை நீா்நிலையில் கொட்டுவதால் நீா் மாசடையும் அபாயம் உள்ளதாக அவா்கள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் விவரம் கேட்க பலமுறை தொலைபேசி மூலம் தொடா்புகொள்ள முயன்றும், அழைப்புகள் ஏற்கப்படவில்லையாம்.

இக்குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதையும், அவற்றை தீயிட்டு எரிப்பதையும் உடனடியாக தடுத்து, நீா்நிலையை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆா்வலா் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments