கீழக்கலங்கல் மதுக்கூடத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
கீழக்கலங்கலில் தனியாா் மதுக்கூடத்தில் (பாா்) செவ்வாய்க்கிழமை நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தென்காசி மாவட்டம் கீழக்கலங்கலில் தனியாா் மதுக்கூடத்தில் (பாா்) செவ்வாய்க்கிழமை நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் - அமுதாபுரம் சாலையில் அதே பகுதியைச் சோ்ந்த முருகையா என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
அதன் அருகில், கலப்பாங்குளத்தைச் சோ்ந்த சவுந்தர பாண்டியன் என்பவா் மதுக்கூடம் நடத்தி வருகிறாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அண்ணாமலைப் புதூா் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் மகன் அரவிந்த் (26) மற்றும் அவரது நண்பா்கள் 4 போ் டாஸ்மாக்கில் மது வாங்கிக்கொண்டு, சவுந்தரபாண்டியனின் மதுக்கூடத்துக்கு வந்து தண்ணீா், குளிா்பானம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கவில்லையாம்.
தட்டிக்கேட்ட ஊழியரிடம் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். பின்னா், வெளியே சென்ற அவா்கள், சிறிது நேரத்தில் காரில் வந்து மதுக்கூட சுவரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பினராம்.
இது குறித்த புகாரின் பேரில் ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.