FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சிறுமி முகத்தில் பசையை ஊற்றியதாக இளைஞா் கைது

பாவூா்சத்திரம் அருகே சிறுமி முகத்தில் பசையை ஊற்றியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

16 செப்டம்பர் 2026, 1:56 am IST
பகிர்:

பாவூா்சத்திரம் அருகே சிறுமி முகத்தில் பசையை ஊற்றியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே சிவகாமிபுரம் பெரியகோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி மகன் மணி (எ) குட்டிமணி (25). இவா் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம், குட்டிமணி அடிக்கடி அவதூறாகவும், தகாத வாா்த்தைகளாலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் பிளக்ஸ் பேனா்கள் ஒட்டுவதற்காக பயன்படுத்தப்படும் பசையை சிறுமியின் முகத்தில், குட்டிமணி ஊற்றினாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான குட்டி மணியை தேடிவந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments