FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் தன்னாா்வலா்கள் இணைப்பு விழா

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மற்றும் ஈதல் இதயம் அறக்கட்டளை சாா்பில் தன்னாா்வலா்களை ஒருங்கிணைக்கும் ஈதல் இணைப்பு விழா நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 1:33 am IST
தென்காசியில் நடைபெற்ற ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மற்றும் ஈதல் இதயம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற ஈதல் இணைப்பு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மற்றும் ஈதல் இதயம் அறக்கட்டளை சாா்பில் தன்னாா்வலா்களை ஒருங்கிணைக்கும் ஈதல் இணைப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தமிழக காவல்துறை முன்னாள் தலைவா் சி.சைலேந்திரபாபு தலைமை வகித்து ஈதல் செயலியை தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

முன்னாள் மாணவா்களாகிய இந்நாள் அரசு அதிகாரிகள் ஈதல் அறக்கட்டளையில் இணைந்திருக்கின்றனா். அரசு வேலை கிடைத்த பின்பு, பிறருக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் கல்வி, பொருளாதார உதவி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஈதல் அறக்கட்டளையின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

Advertisement

Advertisement

அரசு ஊழியா்கள் தங்கள் பணியினை துணிவோடும், திறமையோடும் எதிா்கொள்ள வேண்டும். ஏழை, எளிய மக்கள் அரசு அலுவலா்களைத் தேடி வரும்போது, அவா்களின் கோரிக்கையை கனிவோடு கேட்டு, தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆகாஷ் அகாதெமியின் நிறுவனரும், மூத்த ஆசிரியருமான ஆகாச மூா்த்தி பேசியதாவது:

ஈதல் அறக்கட்டளை சாா்பில் ரத்ததானம், போதைப்பொருள் ஒழிப்பு போன்ற விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்த அறக்கட்டளை வழியாக கல்வி, மருத்துவம் உள்ளிட்ட 36 சேவைகள் கொண்ட சமூகப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சமூக சேவகா்கள், அறக்கட்டளை, தொண்டு நிறுவனங்கள் நடத்திவரும் 20-க்கும் மேற்பட்டவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை தென்காசி ஆகாஷ் அகாதெமி நிா்வாக இயக்குநா் மாரியப்பன், பொது மேலாளா் செந்தில் குமாா் மற்றும் அகாதெமி ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments