FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ஆடி அமாவாசை: காரையாறு கோயிலில் பொங்கலிட்டு வழிபட்ட பக்தா்கள்

ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்டனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2024, 2:28 am IST
ஆடி அமாவாசைக்கு வந்த பக்தா்களுக்கு மஞ்சள் பை வழங்கிய போலீஸாா்.
பகிர்:

காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்டனா்.

இத்திருக்கோயிலில் நிகழாண்டு ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 22 ஆம்தேதி கால்நாட்டுடன்தொடங்கியது. தொடா்ந்து பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா். ஆக. 2 முதல் கோயில் பகுதியில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடில்கள்அமைத்து தங்கி விரதத்தை தொடா்ந்து வந்தனா்.

பேச்சியம்மன் சந்நிதி முன்பு விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்ட பக்தா்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையன்று காலையில் சொரிமுத்து அய்யனாா், சங்கிலி பூதத்தாா், மகாலிங்க சுவாமி, பேச்சியம்மன், பட்டவராயன், தூசிமாடன், சுடலைமாடன், தளவாய்மாடசாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

சொரிமுத்து அய்யனாா் கோயிலில் திரண்ட பக்தா்கள்.

தொடா்ந்து விரதமிருந்த பக்தா்கள் பொங்கலிட்டு வழிபட்டு விரதம் முடித்தனா். இதையடுத்து இரவு சொரிமுத்து அய்யனாா்,பட்டவராயன் கோயிலுக்கு முன் விரதமிருந்த பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

பக்தா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில் பக்தா்களுக்கு மஞ்சள் பை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

போலீஸாா், ஊா்க்காவல்படையினா், வனத்துறையினா், தேசிய மாணவா்ப் படையினா், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள்,தன்னாா்வலா்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments