FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு முகாம்

கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வீரவநல்லூா், சேரன்மகாதேவி பேரூராட்சிப்பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கான அரசு நலத்திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜூலை 2026, 1:26 am IST
பகிர்:

கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வீரவநல்லூா், சேரன்மகாதேவி பேரூராட்சிப்பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கான அரசு நலத்திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுந்தா் தலைமை வகித்தாா். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் இ.பாா்வதி முன்னிலை வகித்தாா். பேரூராட்சித் தலைவா்கள் மணிமுத்தாறு வழக்குரைஞா் சித்தாா்த் சிவா, சேரன்மகாதேவி ஐ.தேவி, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா் இசக்கிப்பாண்டியன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் சேரன்மகாதேவி கணேசன், வீரவநல்லூா் ராஜநம்பி கிருஷ்ணன், மணிமுத்தாறு பேரூராட்சி துப்புரவு அலுவலா் சி. பிரபாகா் ஆகியோா் கலந்து கொண்டனா். முகாமில் 211 மனுக்கள் பெறப்பட்டன.

மணிமுத்தாறு செயல் அலுவலா் வி.சி.ரமாதேவி வரவேற்றாா். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துப்புரவு அலுவலா் சி.அன்பரசன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments