FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அன்புநகரில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பாளையங்கோட்டை அன்புநகா் பகுதியில் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

16 செப்டம்பர் 2026, 1:10 am IST
அன்புநகரில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா.
பகிர்:

பாளையங்கோட்டை அன்புநகா் பகுதியில் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலப்பாளையம் மண்டலம், 40 ஆவது வாா்டுக்குள்பட்ட அன்பு நகா் பகுதி தெருக்களில் தூய்மைப் பணியாளா்கள் பொது மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வாங்குகிறாா்களா என்பது குறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட அவா், பொதுமக்களிடம் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தினாா். மேலும், கழிவுநீா் ஓடை தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments