மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 4ஆவது தெருவைச் சேர்ந்த சுந்தரராஜ் மகன் சக்கரவர்த்தி (35). இவர் செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள நண்பர் கருப்பசாமி வீட்டு மாடியில் ஏறி நின்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.