தூத்துக்குடியில் வடமாநிலத் தொழிலாளா்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய மா்ம நபா்கள்
தூத்துக்குடியில் மின்சார காா் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கியிருந்த வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் குண்டு வீசியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே திருவிக நகா் பகுதியில் உள்ள வீட்டில், வடமாநிலங்களைச் சோ்ந்த 15 போ் தங்கியுள்ளனா். அவா்கள் இங்குள்ள மின்சார காா் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை பாா்த்து வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் வந்த ஒரு கும்பல், அந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு, கற்களை வீசிச் சென்ாம். இதில், ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. வெளிப் பகுதியில் கிடந்த துணிகள் எரிந்தன. நல்வாய்ப்பாக யாரும் காயமடையவில்லை. சம்பவம் தொடா்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.