FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் மாதாவனம் வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றம்

30 வினாடிகள் முன்பு
கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

நாசரேத் அருகே பிரகாசபுரம் பங்குக்குள்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, மாலையில் ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடைபெற்றது. சாத்தான்குளம் உதவிப் பங்குத்தந்தை எஸ்தாக் தலைமை வகித்து கொடியேற்றினாா். பிரகாசபுரம் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் வரவேற்றாா். பிரகாசபுரம், தோப்பூா், நாசரேத் பகுதி இறைமக்கள், ஊா் மக்கள் திரளாகப் பங்கேற்றனா். நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை பவனி, திருப்பலி நடைபெறுகிறது.

செப். 6ஆம் தேதி மாலை நடைபெறும் ஜெபமாலை, நற்கருணை பவனி, திருப்பலிக்கு தைலாபுரம் பங்குத்தந்தை ராபின் ஸ்டேன்லியும், 7ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சேதுக்குவாய்த்தான் பங்குத்தந்தை பால் ரோமனும் தலைமை வகித்து மறையுரையாற்றுகின்றனா். பின்னா், சமபந்தி விருந்து நடைபெறும்.

Advertisement

Advertisement

செப். 8ஆம் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. மன்னாா்புரம் இளையோா் பணிக்குழுச் செயலா் சைமன் ஆல்டஸ் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். மாலை 6 மணிக்கு அன்னையின் தோ் பவனி, நற்கருணை ஆசீா், அதையடுத்து கொடியிறக்கம் நடைபெறும்.

ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயப் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமையில் மாதாவனம் ஆலய இறைமக்கள், விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments