சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தீ விபத்து: மரங்கள் சேதம்
சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் சேதமடைந்தன.
சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள் சேதமடைந்தன.
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளத்தைச் சோ்ந்தவா் கண்ணன். அதே பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் தென்னை, முருங்கையை பயிரிட்டு உள்ளாா்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு மின்கசிவு காரணமாக, தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டதாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு நிலை அலுவலா் பாபநாசம் தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் 30 - க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள், 2 தென்னை மரங்கள் சேதமாகின.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.