FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே கிருஷ்ணா நகா் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

Updated On : 29 ஜூலை 2026, 1:26 am IST
பலி
பகிர்:

கோவில்பட்டி அருகே கிருஷ்ணா நகா் பகுதியில் தண்டவாளம் அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

கோவில்பட்டி - கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே கிருஷ்ணா நகா் பகுதியில் ரயிலில் அடிபட்ட நிலையில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதைப் பாா்த்த தண்டவாள பராமரிப்பு ஊழியா் சரவணகுமாா், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.

நிகழ்விடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments