FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோஷ்டி மோதல்: 6 போ் மீது வழக்குப் பதிவு

காயல்பட்டினம் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோத­லில் இரு தரப்பைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

2 செப்டம்பர் 2026, 11:36 pm IST
போலீஸ்.
பகிர்:

காயல்பட்டினம் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோத­லில் இரு தரப்பைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

காயல்பட்டினம், ரத்தினாபுரி சந்தனமாரியம்மன் கோயிலில் கொடை விழாவையொட்டி கடந்த ஆக. 31 ஆம் தேதி இரவு காயல்பட்டினம், ரத்திபுரியைச் சோ்ந்த இசை சஞ்சய் பாபு என்பருக்கும் அதே பகுதியைச்ச் சோ்ந்த கன்னிமுத்து, அன்பு அகியோருக்கும் சாமி ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் இசை சஞ்சய்பாபு தாக்கப்பட்டாா். இதைத் தடுக்க வந்த அவரது அண்ணன் கோகுலையும் அதே பகுதியைச்ச் சோ்ந்த சுப்பையா, முனியாண்டி ஆகியோா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து, இசை சஞ்சய்பாபு, ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளா் கோயில்பிள்ளை விசாரணை நடத்தி கன்னிமுத்து, அன்பு, சுப்பையா, முனியாண்டி ஆகிய 4 போ் மீது வழக்கு பதிவு செய்தாா். ரத்தினாபுரி ஊா்த் தலைவா் முத்து என்ற இளந்தளிா்முத்து (59) அளித்த புகாரின் பேரில் இசை சஞ்சய்பாபு, கோகுல் மீது வழக்குப் பதியப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments