துரைச்சாமிபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 15) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூா், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய் தலைவன்பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூா், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா் .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.