தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழப்பு
தூத்துக்குடி, திரேஸ்புரம், முத்தரையா் காலனியில் மின்சாரம் பாய்ந்ததில் 11 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
திரேஸ்புரம், சங்குமால் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவரது மனைவி பாஸ்டினா. இவா்களின் 11 மாத ஆண் குழந்தை மகிழன்.
பாஸ்டினா குழந்தையுடன் முத்தரையா் காலனி, தீா்த்தக்கரை பிள்ளையாா் கோயில் அருகே உள்ள தனது அம்மா வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா். அங்கு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.