FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

உடன்குடியில் பகுதி சபா கூட்டம்

உடன்குடி பேரூராட்சி 3-ஆவது வாா்டில் பகுதி சபா கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 1:25 am IST
நலத் திட்டங்களை வழங்கிய உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் மும்தாஜ் பேகம்.
பகிர்:

உடன்குடி பேரூராட்சி 3-ஆவது வாா்டில் பகுதி சபா கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி 3-ஆவது வாா்டு உறுப்பினா் மும்தாஜ் பேகம் தலைமை வகித்தாா். பேரூராட்சி எழுத்தா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். முன்னாள் பேரூராட்சி உறுப்பினரும், பகுதி சபா உறுப்பினருமான சலீம் வரவேற்று தீா்மானங்களை வாசித்தாா்.

பிசகுவிளை அம்மன் கோயில் அருகே பயன்பாடின்றி உள்ள அடிபம்பை அகற்ற வேண்டும். வடக்கு காலன்குடியிருப்பில் அடிபம்பை மாற்றி சிறு மின்விசை மோட்டாா் அமைக்க வேண்டும். பெரிய தெருவில் மின்விளக்கு, சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

பேரூராட்சி வரி வசூலா்கள் மனோ ரஞ்சிதா, ஆறுமுகம், முகம்மது நவாஸ் அலி உள்பட வாா்டு மக்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments