குழந்தை பாதுகாப்பு தொடர்பான கூட்டம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியை இன்பராணி தலைமை வகித்தார். மாவட்ட குழந்தை நல பணியாளர் முத்தமிழ்செல்வன் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் குற்றங்கள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் திருமானூர் காவல் நிலைய குழந்தைகள் நல அலுவலர், கிராம செவிலியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் வரவேற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.