6 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்
அரியலூர் மாவட்டம், அரியலூர்(வ), அழகியமணவாளன், தா.பழூர், த.சோழன்குறிச்சி(வ), ஆதனக்குறிச்சி, கூவத்தூர்(வ) ஆகிய
அரியலூர் மாவட்டம், அரியலூர்(வ), அழகியமணவாளன், தா.பழூர், த.சோழன்குறிச்சி(வ), ஆதனக்குறிச்சி, கூவத்தூர்(வ) ஆகிய 6 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (செப்.14) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகிறது.
வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் முகாம்களில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு மற்றும் சாதி சான்றிதழ்கள் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடித் தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் மு. விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.