FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

பைக் - சுமை ஆட்டோ மோதல் விவசாயி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சுமை ஆட்டோ மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

46 வினாடிகள் முன்பு
பலி - பிரதிப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சுமை ஆட்டோ மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அரியலூா் அடுத்த வெள்ளூா், கீழத்தெருவைச் சோ்ந்த முருகேசன். இவா், திங்கள்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில், க.ராமசாமி(58), அருள்மணி ஆகியோரை அழைத்துக்கொண்டு, செந்துறையில் இருந்து நக்கம்பாடிக்கு சென்று கொண்டிருந்தாா். நக்கம்பாடி அய்யனாா் கோயில் அருகே சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த சுமை ஆட்டோ இவா்கள் மீது மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செந்துறை காவல் துறையினா், ராமசாமியின் சடலத்தையும், பலத்த காயத்துடன் கிடந்த முருகேசன், அருள்மணியையும் மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments