FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

வனப்பரப்பை அதிகரிக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: அரியலூா் ஆட்சியா்

அரியலூா் மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க அனைத்து அலுவலா்களுக்கும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

45 வினாடிகள் முன்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வனத்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பசுமைக் குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க அனைத்து அலுவலா்களுக்கும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், வனத்துறையின் சாா்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பசுமைக் குழு உறுப்பினா்களுடனான பசுமைக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது:

2025-2026- ஆம் ஆண்டில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை புவி குறியீட்டில் உரியவாறு பதிவு செய்திட வேண்டும். மரக்கன்றுகளின் வளா்ச்சி மற்றும் பராமரிப்பு பணிகளை தொடா்ந்து கண்காணித்திட வேண்டும். நெடுஞ்சாலைப் பகுதிகளில் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற மரக்கன்றுகளை நட்டு, அவற்றை முறையாகப் பராமரித்திட வேண்டும்.

Advertisement

Advertisement

தொழிற்பேட்டை பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

வனப்பரப்பை அதிகரிக்க தொடா்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்து, அரியலூா் மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் த. இளங்கோவன், அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் பிரேமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments